கரையோர வலயம் என்பதன் கருத்து, அலைமோதுகிற பிரதேசத்திலிருந்து முன்னூறு மீற்றர் எல்லையிலும் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள பிரதேசமாகும். அதாவது, நிரந்தரமாக அல்லது காலத்திற்குக் காலம் கடலுடன் கலக்கும் ஆறுகள், நீரோடைகள், கடல் ஏரிகள் அல்லது ஏனைய நீர்நிலைகள் என்பவைகள் கடலுடன் கலக்கின்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் என்பதாகும். ஆறுகள், நீரோடைகள், கடல் ஏரிகள் அல்லது ஏனைய நீர்நிலைகள் என்பவைகள் கடலுடன் கலக்கின்ற இடத்திலிருந்து நூறு மீற்றர் சுற்றயல் தூரத்தையும் இது உள்ளடக்குகிறது.